புதன், 3 ஏப்ரல், 2019

திருக்குறள் -சிறப்புரை :1184


திருக்குறள் -சிறப்புரை :1184

 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.----- ௧௧௮

எப்பொழுதும் என்மனத்தால் நினைப்பதும் அவர் குணங்களை உரைப்பதுமாகவேயிருந்தும் என் மேனியெல்லாம் பசலை பரவிவிட்டதே, இது வஞ்சனையாலன்றி வேறு எதுவோ..?

நுதலும் நுண்பசப்பு இவரும் தோளும்
அகல்மலை இறும்பின் ஆய்ந்துகொண்டு அறுத்த
பணை எழில் அழிய வாடும் நாளும்
நினைவல் மாது அவர் பண்பு…….” ----அகநானூறு.

நெற்றியும் நுண்ணிய பசலை படரவும் ;  தோளும் அகன்ற மலையிலுள்ள குறுங்காட்டில் ஆய்ந்து அறுத்தெடுத்த மூங்கில் துண்டைப் போன்று அழகு அழிய வாட்டமுற்றது. பிரிவுத் துன்பத்தை மறக்க, அவர் பண்புகளை நாள்தோறும் யான் நினைவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக