திங்கள், 13 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்-35


தன்னேரிலாத தமிழ்-35

செல்வம் பயன்படுமோ…?

பொதுமகளே போலும் தலையாயர் செல்வம்
குலமகளே ஏனையோர் செல்வம் கலன் அழிந்த
கைம்மையர் பெண்மை நலம் போல் கடையாயர்
செல்வம் பயன்படுவது இல்.”நீதிநெறி விளக்கம்.

 தலைமக்களின் செல்வம் பொதுமகளிரைப்போல் யாவர்க்கும் பயன்படும் ; இடைமக்களின் செல்வம் குலமகளிரைப் போல் உரிமை உடையவர்க்கே பயன்படும் ; கடைமக்களின் செல்வம் மங்கலம்  இழந்த கைம்பெண்களைபோல் யாருக்கும் பயன்படுவதில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக