புதன், 29 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ்- 47. தமிழர் மருத்துவம்


 தன்னேரிலாத தமிழ்- 47. தமிழர் மருத்துவம்
மருத்துவம்
 போரில் பெரும் புண்பட்டு வீழ்ந்த மறவர்க்கு மருத்துவம் செய்வோர் மனையைத் தூய்மைசெய்து ஒப்பனை செய்வதும் இனிய இசை பாடுதலும் நறிய மணப்பொருள்களைப் புகைத்து எங்கும் நறுமணம் கமழுமாறு செய்வதும் பண்டைய தமிழ் மக்கள் மரபு . (உரை வேந்தர்-)

தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
                 ………… அரிசில்கிழார்.புறநா.281: 1 – 6

இனிய கனிகளைத்தரும் இரவமரத்தின் தழையுடனே வேப்பிலையும் சேர்த்து மனையிறைப்பில் செருகி ; யாழுடன் பல இசைக கருவிகள் ஒலிக்க; கையில் மையாகிய மெருகினை இட்டு; வெண் சிறு கடுகினைத் தூவி ; ஆம்பல் குழலை ஊதி ; மணியோசையை எழுப்பி ; காஞ்சிப் பண்ணைப் பாடி; நெடிய மனையில் நறுமணம் கமழும் அகில் முதலியவற்றைப் புகைத்து... இரவமொடு வேம்பு மனைச் செருகுதல் முதலிய செயல்கள் பேய்கள் புண்ணுற்றோனை வந்து தொடாவாறு காத்தற்குச் செய்வன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக