செவ்வாய், 28 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 46


தன்னேரிலாத தமிழ் - 46

காலம்அறிந்து ஆங்குஇடம் அறிந்துசெய் வினையின்
மூலம்அறிந்து விளைவுஅறிந்து மேலும் தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும். --- நீதிநெறிவிளக்கம்.

ஒரு செயலைச் செய்வதற்கான காலம், இடம், காரணம் ஆகியவற்றையும் அச்செயலைச் செய்வதினால் ஏற்படும் பயனையும் அறிந்து, மேலும் தாம் ஆராய வேண்டியவற்றைச் செம்மையாக ஆராய்ந்து, தம் முயற்சிக்குத் துணை ஆவார் வலிமையையும் அறிந்து, அதன் பின்னர் முயற்சி மேற்கொள்ளப்படும். எனவே காலம் , இடம் முதலியவற்றைக் கருதியே ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக