ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

தன்னேரிலாத தமிழ் - 45


தன்னேரிலாத தமிழ் - 45

தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும்
தீயன தீயனவே வேறு அல்ல தீயன
நல்லன ஆகாவாம்  நா இன்புற நக்கிக்
கொல்லும் கவயமாப் போல்----” ---நீதிநெறிவிளக்கம்.

தான் கொல்ல விரும்பும் உயிரைத் தன் நாவினால் நக்கி இன்பம் ஊட்டி, அவ்வுயிர் இன்பத்தில் திளைத்து நிற்கும் போதே எதிர்பாராமல் தாக்கிக் கொல்லும் (கவயமா) காட்டுப் பசுவினைப் போல்,   தீமைமிக்க செயல்களைச் செய்கின்றவர்களின் செல்வம் பெருகி வளர்ந்தாலும் தீய செயல்களால் திரட்டிய செல்வம் எல்லாம் தீமை பயப்பனவே ஆம்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக