செவ்வாய், 2 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…50.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…50.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

“அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்.”

பற்பல சிறந்த நூல்களைப் படித்துத் தெளிந்த அறிவுடைய சான்றோர்,  தாம் அனைத்தும் அறிந்தவர் என்னும் ஆணவமின்றி  அனைவரிடத்தும் பண்புடன் பழகுவதே சிறப்புடையதாம்.

“நில நலத்தால் நந்திய நெல்லே போல் தம்தம்

குல நலத்தால் ஆகுவர் சான்றோர்.” –சமணமுனிவர்கள், நாலடியார் ; 18  ; 9.

நிலத்தின் வளத்தினால் பெருகிய நெல்லைப் போலத் தம்முடைய இனத்தின் சிறப்பினால் ஒழுக்கமும் உயர்வும் பெற்றுச் சான்றோராகத் திகழ்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக