திங்கள், 15 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…59.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…59.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே.”

பொன்னோ பொருளோ இல்லாதவன் கல்வி கற்க இயலாதவனாகிவிடக் கூடாது. உண்பதற்கு உணவு இல்லையென்றாலும் பிச்சை எடுத்தாவது உயிரைக்காத்துக் கொள்ள நினையாது கல்வி கற்று உயர்ந்தவனாதல் வேண்டும்.

 

“ பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்.” – பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், புறநானூறு : 183.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தவருள்ளும் அவரவர் கல்விச் சிறப்பின் காரணமாகத் தாயும் அன்பு காட்டுவதில் மனம் வேறுபடுவாள். பெற்ற தாய் கல்வி கற்றவனையே போற்றிப் பாராட்டுவாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக