வியாழன், 18 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…61.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…61.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்

கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி

எச்சமற்று ஏமாந்து இருக்கை நன்றே.”

 

பிள்ளகளாகப் பிறந்தவர்கள் பெற்றோர் கற்பிக்கும் ஒழுக்க நெறிகளைக் கேட்டு உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்க்கு அடங்கி நடக்காத பிள்ளைகள் குடும்பத்திற்கு பெருங் கேடாகும்.

நல்ல அறிவும் ஆற்றலும் இல்லாத பிளைகளைப் பெறுவதைவிட  அக் குடும்பத்திற்கு பிள்ளைகளே இல்லாமல் போவது மிகவும் நல்லதாகும்.

 

“பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவுஅறிந்த

மக்கட் பேறு அல்ல பிற. “ –குறள்.61.

 

ஒருவன் பெறும் பேறுகளுள் சிறப்பானது அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய மக்களைப் பெறுதலே; பிற பேறுகளை யாம் போற்றுவது இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக