புதன், 3 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…51.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…51.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை.”

வறுமையில் வருந்தி வாடிநிற்கும் நிலைமை வந்த  போதும் அவன் ஏழையாயினும்  தன்மானத்தைவிட்டு எவரிடத்தும் சென்று நின்று, கையேந்தி வாழாமையே அவனுக்குப் பெருமையாகும்.

 

“செய்யீரோ என்னானும் என்னும் சொற்கு இன்னாதே

பையத் தாம் செல்லும் நெறி.” – சமண முனிவர்கள், நாலடியார்: 31’9.

 

ஏதாவது உதவி செய்ய மாட்டீரோ ? என்று பிறரிடம் சென்று கெஞ்சிக் கேட்கின்ற சொல்லைக் காட்டிலும் வறுமையுடன் வாழ்வது அவ்வளவு துன்பம் உடையதாகுமோ.? ஆகாது என்பதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக