வியாழன், 25 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…66.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…66.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டின்

கடும்புலி வாழுங் காடு நன்றே.”

தன் குடிமக்களை வாட்டி வதைத்து வரியாகப் பெரும்பொருள் ஈட்டும் கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்யும் நாட்டில் வாழ்வதைவிடக் கொன்றுதின்று வாழும் கொடும்புலி வாழும் காட்டில் வாழ்வது நல்லதே.

 

 

‘ கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்

படுங்கதிர் அமையம் பார்த்திருந்தோர்…” –இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்: 13.

கொடுங்கோல் அரசன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அவன் என்று செத்து ஒழிவான் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதைப்போல,  வெம்மையான கதிரவன் மறையும் பொழுதை அவர்கள் (கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள்)  ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக