வியாழன், 4 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…52.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…52.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை

வானுற ஓங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.”

 

தேன் போலும் இனிய சுவையுடைய பனம் பழத்தின் பெரிய விதையிலிருந்து மரம், நெடிது உயர்ந்து வளர்ந்தாலும் அதன் நிழல் நகர்ந்துகொண்டே செல்வதால் ஒருவர் இளைப்பாறவும் நிழலைத் தருவதில்லை. அதுபோல வருந்துவார்க்குப் பயன்படாத பெரிய செல்வமும் பயனற்றதாம்.

“செல்வம் பெரிது உடையார் ஆயினும் கீழ்களை

நள்ளார் அறிவுடையார்.” –சமணமுனிவர்கள், நாலடியார்:27.7.

கீழ் மக்கள் எவ்வளவு செல்வம் உடையவராயிருந்தாலும் அறிவுள்ளவர்கள் அவர்களுடன் நட்புக் கொள்ளமாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக