திங்கள், 8 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 1

4 . பெரும்பாணாற்றுப்படை
தொண்டைமான் இளந்திரையனைச் சிறப்பித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாட்டு.
பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 1
இயற்கையைப் போற்றுதும்
இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தவர்கள் நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர், தாம் படைக்கும்  படைப்புக்களிலும் ஞாயிறு, திங்கள், உலகம், கடல், வானம், முகில், மழை, ஆறு போன்ற இயற்கைச் செல்வங்களைச் சொல்லோவியமாகத் தீட்டி மகிழ்ந்தனர்.
 சிலப்பதிகாரம் யாத்த இளங்கோவடிகள்…
“ திங்களைப் போற்றுதும்…. எனத் திங்கள், ஞாயிறு, மழை ஆகிய இயற்கைப் பொருள்களைப் போற்றித் தம் காப்பியத்தைத் தொடங்குகின்றார்.மணிமேகலைக் காப்பியத்தின் பதிகமும் “இளங்கதிர் ஞாயிறு “ எனத் தொடங்குகிறது. அவ்வாறே ஆசிரியர் உருத்திரங் கண்ணனாரும் “ அகல் இரு விசும்பு” எனத் தொடங்குகின்றார்.
அகல் இரு விசும்பு  என்ற தொடருக்குத்  “தன்னையொழிந்த நான்கு பூதங்களும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமான வானம்” என நச்சினார்க்கினியர் நுட்பமான உரை வகுத்துள்ளார்.
இவ்வுத்தியை ஏனைய தமிழ் இலக்கியங்களிலும் கண்டு மகிழ்க. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக