வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 12

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 12
குமரி மூத்தல்
முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரி மூத்த கூடுஓங் நல் இல்
   கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 246- 247
ஏணிக்கு எட்டாத நெடிய வடிவினையும் தலையைத் திறந்து சொரியப்பட்ட உணவாகும் பழைய நெல்லையும் உடௌயவாய்க் கன்னிமையோடு உயர்ந்து நிற்கும் முதிர்ந்த நெற்கூடுகள் அவ்விலங்களிலே காணப்படும்.
 ( ஒரு கன்னி மணப் பருவம் பெற்றும் கணவனைப் பெறாது வீணே முதியவள் ஆகி விடுதலைக் ’ குமரி மூத்தல்’  என்பர்.
“ அமரர் கோன் ஆணையின் அருந்துவோர்ப் பெறாது
 குமரி மூத்தவென் பாத்திரம்..” மணிமே. 76  -77 .
“ அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
 பெற்றான் தமியள்மூத் தற்று.” குறள். 1007.  எனக் குமரி மூத்தல் குறித்தமை காண்க. ஈண்டு மேன்மேலும் புதிய வருவாய் வந்து நிரம்புவதால் பழைய நெல், உணவுக்கு எடுக்கப்படாமல், ‘ குமரி மூத்து கூடு ‘ ஆயின அவ்வுழவர்களின் நெற்கூடுகள்.)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக