திங்கள், 15 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 8

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 8
வீர மங்கை
 யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிர விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
  கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 134  - 136

யானை தன்னைத் தாக்க வந்தாலும், தன்மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும், இடி இடித்தாலும் கருவுற்ற பெண்கூட  இவற்றிற்கெல்லாம் அஞ்சாத  - மறத்தன்மை மிக்க வாழ்க்கை குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை.
(  தோப்பி – வீட்டிலேயே நெல்லாற் சமைத்த கள் என்பதை ‘இல் அடு கள் இன் தோப்பி’ என்னும் தொடரால் பெற வைத்தார் ஆசிரியர். இக்கள் பிற கள்ளை விட இனிமையுடையதாய் இருக்கும் என்பதால் ‘இன் தோப்பி’ என்றார்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக