வியாழன், 4 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 14

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 14
நல்லியக் கோடனின் ஆமூரில் மருத நில உணவு.
இருங்காழ் உலக்கை இரும்புமுகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுவீர்.
  இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 193  – 195
பூண் அனிந்த பெரிய உலக்கையால் குற்றி எடுக்கப்பட்ட கைக்குத்தல் அரிசியுடன் வளைந்த கால்களையுடைய நண்டுடன் மருதநில மக்கள் வெண்சோறு விருந்து படைப்பர்.
( பேய் – பேயின் கால் பெரிதும் பிளவுபட்டிருக்கும் என்பதைக் குறிக்க “ கவையடிப் பேய்மகள் “ என்றார். –” சுடுகாட்டுக் கோட்டத்து இடுபிணந் தின்னும் . இடாகினிப் பேய்…. சிலம்பு. “ இரும்பேர் உவகையின் எழுந்தோர் பேய்மகள் ……………… கந்தொட் டுண்டு கவையடி பெயர்ந்து “ – மணிமே. )  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக