புதன், 17 பிப்ரவரி, 2016

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 10

பெரும்பாணாற்றுப்படை – அரிய செய்தி – 10
குறும்பூழ்
அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறுங்கால்
கறை அணற் குறும்பூழ் கட்சிச் சேக்கும்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா. 4 : 201 - 204

மருத நில உழவர்  பயிர் அறுக்கும் பருவம் வந்தக்கால். அவர்கள் எழுப்பும் ஆரவாரத்திற்கு அஞ்சி,  அவ்விடத்தே உள்ள மரங்களில் கூடு கட்டி வாழும் குறிய காலையும் கரிய கழுத்தையும் உடைய குறும்பூழ்ப் பறவைகள் ,  வெண்கடம்பின் நறிய மலரையொத்த பறக்கலாற்றாத தம் இளங்குஞ்சுகளையும் கூட்டிக் கொண்டு போய்க் காட்டிடத்தே தங்கும்.
( இச்செய்தி , பட்டினப்பாலையிலும்  ( 53- 58) இடம்பெற்றுள்ளது.   செஞ்சால் உழவர் – பலமுறை உழுதலைச் செய்யும் உழவர் . ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக