சனி, 6 பிப்ரவரி, 2016

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 16

சிறுபாணாற்றுப்படை – அரிய செய்தி – 16
பாடுதுறை முற்றிய பயந்தெரி கேள்விக்
கூடுகொள் இன்னியம் குரல் குரலாக
நூல்நெறி மரபின் பண்ணி ஆனாது
முதுவோர்க்கு முகிழ்த்த கையினை…..
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். சிறுபாண். 3 : 228  – 231
நல்லியக்கோடனைப் போற்றிப் பாடும் பாணன் ….. அமிழ்தத்தைத் தன்னிடத்தே பொதிந்து வைத்திருக்கும் முறுக்கடங்கின நரம்புகளைக்கொண்ட சீறியாழ். இவ்வினிய இசைகளைக் கொண்ட யாழை, விளங்கின்ற இசை நூல் முறைமையால் செம்பாலையாக இயக்கி, ஐம்பெருங் குரவர் முதலியோர்க்குக் குவித்த கைகளை உடையோய்…!
( பாம்பு வெகுண்டன்ன தேறல் – பாம்பின் நஞ்சேறி மயங்கினாற்போன்று களிப்பு நல்கும்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக