சான்றோர் வாய் (மை) மொழி :
189–அறிவியல் சிந்தனைகள்: இக்காலச் சிந்தனைகள்.
சமயக் காரிருள் அறிவுச் சூரியனின் கதிர்கள்பட்டு விலகியது. மக்களிடம்
நாட்டுப்பற்று, மொழிப்பற்று மேலோங்கி சமயம்
பின்னுக்குத் தள்ளப்பட்டது. இலக்கிய மறுமலர்ச்சி , சமயச் சீர்திருத்தம், அரசியல் புரட்சி, அறிவியல்
வளர்ச்சி ஆகியவற்றால் ஐரோப்பா கண்டம் முழுமையும் படர்ந்திருந்த அறியாமை மூடுபனி அகன்றது.
மக்கள் உலகியல் வாழ்வுக்கு முதன்மை தந்தனர். தொழில்
புரட்சியும் – பொருளாதார உற்பத்திச் சாதனங்களும் பெருகின.
இடைக்காலம் (கி.பி. 5 – 15 ) இருண்ட காலம் என்றாலும் “புது யுகம்”
என்ற கருவைச் சுமந்து வளர்த்த தாயாக இருந்தது புது யுகம் 14ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்
பிறந்தது. சிறிதுசிறிதாக வளர்ந்து 17ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உலக மக்களின்
கவனத்தை ஈர்த்தது. பல நூறுஆண்டுகள் தடைப்பட்டுக் கிடந்த சிந்தனை ஓட்டம் அனையை உடைத்தெரிந்து
ஐரோப்பிய நாடுகளின் மூலைமுடுக்களிலெல்லாம் பாய்ந்தோடியது.
மறுமலர்ச்சி:
கி.பி. 14 இல் கிரேக்கத்திலும் ரோமானிய இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஐரோப்பாவில் பல
துறைகளிலும் மாற்றம் . மக்கள் புது வரவும் உறவும் கொண்டனர். பழைய இலக்கியங்கள் புதிய பார்வையில் பூத்தன. சிந்தனையில் புரட்சி, கலைகளில்
புது வடிவம், புதிய கண்டுபிடிப்புகள் ஏற்பட்டன. சமுதாய அமைப்புத்
தலைகீழாய் மாறியது..
புதுயுகத்தில் மனித முயற்சி மதிக்கப்பட்டது . சமயப் பற்றில் ஆற்றல்
இழந்த மனிதன் தன் அளப்பரிய ஆற்றலை எண்ணி வியந்தான். தான் ஈட்டிய வெற்றிகளைக் கண்டு
மகிழ்ந்தான்.
இலக்கியப் புரட்சி :
……………………………….தொடரும் …………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக