தமிழமுது -7
- தாய்மொழி வழிக் கல்வி.
மகாகவி பாரதியார்-
1882 – 1921.
ஆங்கிலக் கல்வியால்
பெருகும் அறியாமையை எண்ணி வேதனையோடு பாரதியார்………
“ சென்ற நூறு
வரிஷங்களாகைந்நாட்டில் இங்கிலீஷ் படிப்பு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான பாடசாலைகள்
ஏற்பட்டிருக்கின்றன. இவற்றுள் லட்சக்கணக்கான ஜனங்கள்படித்துத் தேறியிருக்கிறார்கள்.
இவர்கள் மூட பக்திகளை எல்லாம் விட்டு விலகி இருக்கின்றாகளா…?
இங்கிலீஷ்
பள்ளிக்கூடங்களுக்குப் போய் தேறியவர்களிடம் மனச்சாட்சிப்படியும் தன் அறிவுப் பயிற்சியின்
விசாலத்திற்குத் தகுந்தபடியும் நடக்கும் யோக்கிதை மிகமிக்க் குறைவாக இருக்கிறது” என்று ஆங்கிலக் கல்வியின் பயனை மதிப்பிட்டதோடு.
“தமிழ்நாட்டில்
உண்மையான கல்வி பரவ வேண்டுமானால் சகல சாஸ்திரங்களும் தமிழ் பாஷை மூலமாகவே கற்றுக்கொடுக்க
வேண்டுமென்ற கொள்கையை அனுசரனைக்குக் கொண்டு வருவதற்குத் தக்கபடி நமக்குள்ளே சக்தி பிறக்கவில்லை.”
என்றும் வருத்தப்படுகிறார்.
மேலும்
பாரதியார்…..” கல்வி போதிப்பதற்கு ஒருவனது சொந்த தாய் பாஷை மட்டுமே இயற்கையானதும் மனிதப்
பண்பிற்கு ஏற்றதுமான போதனாபாஷையாகும் என்பதே நமது முக்கிய வாதமாகும். யாராவது இதில்
சந்தேகப்பட்டால் அவர் ஜப்பான், ஸ்காண்டினேவியா, இங்கிலாந்து, இத்தாலி, மெக்ஸிகோ அல்லது
மனிதரை மனிதராக மதிக்கும் எந்த ஒரு தேசத்திலுள்ள கல்வித்துறை வித்வான்களைப் போய் விசாரித்துப்
பார்க்கட்டும். முக்கியமாக தமிழ் தேசத்தைப் பொறுத்தமட்டில் அன்னிய பாஷையைப் பாட போதனைக்குப்
பயன்படுத்துவது அதிர்ச்சியளிக்கக் கூடியதாகும். ஏனெனில் சரியாகவும் விஞ்ஞான பூர்வமாகவும்
சொல்வதற்குத் தமிழ் பாஷை இங்கிலீஷ் பாஷையைவிடப் பல மடங்கு உயர்ந்ததாகும்.” எனும் பன்மொழியறிஞர்
பாரதியார் கூற்றை உற்று நோக்குங்கள்.
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக