தமிழமுது -8
- தாய்மொழி வழிக் கல்வி.
நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.
1884 – 1944.
ஐயா அவர்கள், தாய் மொழி வழியே கல்வி பயில்வதுதான்
சாலச் சிறந்தது என்று வலியுறுத்துகின்றார்.
“கல்வியானது உலகில் வழங்கும்
பல மொழிகளாலும் எய்தற்பாலதே யெனினும் தாய்மொழியிற் கற்றலென்பது ஒவ்வொருவர்க்கும் உரிய
கடன்களுள் விழுமியதொன்றாம். அன்றியும் நாட்டு மக்களனைவரும் கல்வி கற்று அறியாமையினீங்குதற்கு
வேற்று மொழியைத் துணையாகக் கொள்ளுதல் ஆற்று வெள்ளத்தைக் கடக்க மண் குதிரையைத் துணையாகக்
கொண்டது போலும் பயனில் செயலேயாகும்.” என்கிறார்.
பாவேந்தர் பாரதிதாசன் – 1891 – 1964.
தமிழகத்தில் கல்வி அனைவர்க்கும்
கட்டாயமாக்கப்படவேண்டும் எனக் கூறும் கவிஞர் அக்கல்வி, தாய்மொழிக் கல்வியாகவும் அதன்வழியே
கல்வி பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று…
“தமிழ்க் கல்வி தமிழ்நாட்டில்
கட்டாயம் என்பதொரு சட்டம் செய்ய
வேண்டும்.” என்று வலியுறுத்துகின்றார்.
……………….தொடரும்……………………………..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக