வியாழன், 27 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி - 6

நற்றிணை – அரிய செய்தி - 6
உணவு-மருந்து
விளம்பழம் கமழும் கமஞ்சூல் குழிசிப்
பாசந் தின்ற தேய்கான் மத்த
கயமனார், நற். 12 : 1,2
 தயிர்ப்பானையில் முடை நாற்றம் தீர விளம் பழம் இட்டுவைத்தலானே அதன் மணம் கமழ்கின்ற நிறைந்த தயிர்- தாழியில் கயிறாடித் தேய்த்ததாலே தேய்ந்த தண்டினை உடைய மத்திட்டு...
இம்முறை இன்றும் உண்டோ ? சித்த மருத்துவ முறை என்பர்- ஆய்க.

( குழிசி – தாழி. பானை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக