வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நற்றிணை – அரிய செய்தி - 7-9

நற்றிணை – அரிய செய்தி - 7
யானையை வீழ்த்திய பாம்பு
ஞால்வாய்க் களிறு பாந்தள் பட்டெனத்
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப்பூசல்
                                                      மாமூலனார், நற்.14: 8,9
  தொங்குகின்ற வாயையுடைய களிற்றுயானை பெரும்பாம்பின் வாய்ப்பட்டதாக, சோராத துயரோடு அஞ்சுகின்ற பிடியானை பிளிரும் பேரொலியானது... யனையைத் தாக்குமா பாம்பு –ஆய்க. பாந்தள் – பாம்பு.
நற்றிணை – அரிய செய்தி - 8
பல் பதித்த கதவு
………………………… மூவன்
முழுவலி முள்ளெயி றழுத்திய கதவிற்
பொய்கையார், நற்.18 : 3,4
தொண்டித் திருநகர்சேரன்பகைவன் மூவன்  -போரில் வென்று பற்களைப் பிடுங்கிவைத்து இழைத்தவாயிற்கதவு.( பகைவரை அட்டு அவர் பல்லைக்கொணர்ந்து தமது கோட்டைவாயிற் கதவில் வைத்துத் தைத்தல் பண்டை வழக்கு இதனை, கல்லா எழினி பல்லெறிந் தழுத்திய வன்கட் கதவின் வெண்மணி வாயில், மத்தி அகம்.210 )
காட்டுக்கோழி- நாங்கூழ்இரைகொள்ளுதல், நற்.21 ( உதுக்காண்- உங்கே பாராய்)
நற்றிணை – அரிய செய்தி - 9
தைந்நீராடல்
………………….நோன்பியர்
கையூ ணிருக்கையின் தோன்றும் நாடன்
……………………….. நற். 22: 6,7
நோன்புடையார் தைத் திங்கள் பிறப்பில் நீராடி நோன்பு முற்றியிருந்து உண்ணுதல் போல….

புள்ளி- குதிரின் உறைக்கிடப்பட்ட எண்ணுதலமைந்த குறியீடு.- செவ்வி சேர்ந்த புள்ளி வெள்ளரை- நற்.26

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக