திங்கள், 30 நவம்பர், 2015

பரிபாடல் – அரிய செய்தி - 11

பரிபாடல் – அரிய செய்தி - 11
வையை வெள்ளம்  - பறை முழக்கம்
அகல்வயல் இளநெல் அரிகால் சூடு
தொகு புனல் பரந்தெனத் துடிபட……
மையோடக் கோவனார். பரிபா. 7 : 27 -28
வையை யாற்றில் பெருக்கெடுத்து வந்த பெரு வெள்ளம் ; ஒரு பக்கம் வயலில் விளைந்து முற்றிய இள நெல்லின் மீதும் – அறுத்து அடுக்கி வைத்திருந்த அரிகளின் மீதும் மிகுதியான வெள்ளம் பெருகிப் பரந்தது என்று சொல்லி அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு அறிவிப்பதற்குப் பறையை முழக்கினர். ( ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு ஊரினுள் வெள்ளம் புகுமானால் உடைப்பை அடைக்க பறை முழக்கி மக்களைத் திரட்டுவர். பண்டிருந்த இவ்வழக்கம் அண்மைக்காலம் வரை  தஞ்சை மாவட்டத்தில் இருந்தது. மேலும் வெள்ள நீர் வடியவும் பறை முழக்குவர் – காடு கரைகளை மக்கள் விழிப்புடன் காக்க வேண்டும் என்பதை உணர்த்துதலே பறை ஒலியின் கருத்துப் புலப்பாடாகும். பறை ஓசைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தனி கருத்துப் புலப்பாட்டுத் திறம் உண்டு- அவற்றை அறிந்து ஆய்க - மேலும் காண்க: 10 ஆம் பாடல் .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக