வெள்ளி, 6 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 15 - 16

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 15 - 16
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் - 1
உலகத்தோரே பலர்மன் செல்வர்
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே
வளம் தலை மயங்கிய பைதிரம் திருத்திய
 களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 38 : 1  – 4
 உலகத்தோரில் செல்வவளம் படைத்தோர் பலர் ; அவர்தம் புகழ் தோன்றாமல் மறைந்தது ; அவர் அனைவருள்ளும் நின் நல்ல புகழ் மேம்பட்டுத் தோன்றும். பல வளங்களும் ஒன்றோடொன்று கலந்து கிடக்கின்ற நாட்டைச் செம்மைப் படுத்திய – களங்காயால் செய்யப்பட்ட தலையில் சூடும் மாலையினையும் நாரால் செய்யப்பட்ட முடியினையும் உடைய சேரனே.
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 16

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் - 2
இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்கச்
சீர்மிகு முத்தம் தைஇய
நார்முடிச் சேரல் நின் போர் நிழல் புகன்றே
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 39 : 14  – 17
விளங்குகின்ற மணிகள் நெருங்கின பசிய பொன் தகட்டால் செய்த கூட்டினிடத்தே நூலிலே கோர்த்த ஒளியை உமிழ்ந்து விளங்கும்படி சிறப்பு மிக்க முத்து வடங்களைச் சூழக் கோர்த்து  ( சிலந்தி வலையை முத்து சூழ்ந்தால் போல ) நாரால் செய்த முடியினை உடைய சேரலே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக