செவ்வாய், 17 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 33 - 34

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 33 - 34
கொடுமணம்
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
 பந்தர்ப் பெயரிய பேர் இசை மூதூர்
கடன் அறி மரபின் கைவல் பாண
தெண் கடல் முத்தொடு நன் கலம் பெருகுவை
கபிலர். பதிற். 67  : 1 - 4
பாணனே ! கொடுமணம் என்னும் ஊரிலே உண்டான நல்ல அணிகலன்களையும் பந்தர் என்னும் பெயருடைய புகழ் வாய்ந்த பழைய ஊரிடத்தேயுள்ள தெளிந்த கடலில் முத்துக்களையும் பெறுவாய். ( கொடுமணம் தொழில்மாட்சிமைப்பட்ட நல்ல அணிகலன்களுக்கும்  பந்தர் முத்துக்களுக்கும் பெயர் பெற்றன.)
யூபம் – தலையற்ற முண்டம் ( போர்க்களத்தில் வெட்டுண்டு தலையற்று வீழ்ந்து துடிக்கும் பிணம்.)   (ஊனம் – இறைச்சி ; பாசவர் – இறச்சி விற்பார்.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 34
உத்தரகுரு – வட புலம்
நாமம் அறியா ஏம வாழ்க்கை
வடபுல வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கலும்
இன் நகை மேய பல் உறை பெறுபகொல்
கபிலர். பதிற். 68  : 12  - 14
துன்பத்தால் வரும் அச்சத்தை அறியாத – இன்பமேயான வாழ்வை உடைய வடக்கேயுள்ள நிலமாகிய உத்தரகுருவின்கண் வாழ்வாரைப் போலப் பெரிதும் விரும்பி நாள்தோறும் இனிய இன்பம் பொருந்திய பல நாட்களைப் பெறுவார்களோ…. பெறார் என்பதாம். ( போக பூமி  - அறத் தானாகிய தலைப்படு தானம் செய்தோரே உத்தரகுருவை எய்துவர். “ அத்தகுதிருவின் அருந்தவம் முடித்தோர் . உத்தரகுருவின் ” –சிலம்பு. 2: 9-10 )  (நாமம் – அச்சம் ; ஏமம் – இன்பம் ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக