புதன், 18 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 35 -36

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 35 -36
மக்கட் பேறு
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளந் துணைப் புதல்வரின் முதியர்ப் பேணி
தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல்
 கபிலர். பதிற். 70  : 20 - 22
 பெரியோரிடத்து வணங்கிய மென்மையும் பகைவர்க்கு வணங்காத ஆண்மையும் உடைய -  இளந்துணையாகிய புதல்வர்களைப் பெற்றமையால் – நின் குலத்து முன்னோர்களான பிதிரர்களைக் காப்பாற்றி – இல்லறத்தார்க்கு உரிய பழைய கடன்களைக் செய்து முடித்த – வெல்லும் போரைச் செய்யும் தலைவனே. ( பிள்ளைகள்  பிதிரர்க் கடன் செய்வதன் மூலம் முன்னோரைக் காத்தலால்)19/11/15

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 36
பதிகம்
ஓத்திர நெல்
 ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி
மாய வண்ணனை மனன் உறப் பெற்று அவற்கு
ஓத்திர நெல்லின் ஓகந்தூர் ஈத்து…
பல யாகங்களையும் – பெரிய அறச் செயல்களையும் செய்து முடித்தவன் சேரன் வாழியாதன்.  கரிய நிறமுடைய திருமாலைத் தன் மனத்துப் பொருந்தப் பெற்றவன். அத்தெய்வத்திற்கு ஓத்திர நெல் என்னும் ஒருவகை நெல் விளையும் ஓகந்தூர் என்னும் ஊரினைத் தேவதானமாகக் கொடுத்தவன். (  ஓத்திர நெல் – இராசா அன்னம் : இந்நெல் ஒரு பறவையின் பெயர் பெற்றதாம்; இதனை மின்மினி நெல் என்றும் கூறுவர்.)
மல்லல் உள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழியாதனைக்
கபிலர் பாடினார் பத்துப் பாட்டு
அந்துவஞ்சேரலுக்கும் – பெருந்தேவிக்கும் பிறந்தவன்  செல்வக் கடுங்கோ வாழியாதன். இவன் இருபதாண்டு ஆட்சி வீற்றிருந்தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக