சனி, 7 நவம்பர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 17

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 17
நன்னன் காவல் மரம்
பொன் அம் கண்ணி பொலந் தேர் நன்னன்
சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த
தார் மிகு மைந்தின் நார் முடிச் சேரல்
காப்பியாற்றுக் காப்பியனார். பதிற். 40 : 14  – 16
பொன்னால் செய்த மாலையையும் பொன்னால் செய்த தேரினையும் உடைய நன்னனது -  ஒளிவிடும் பூக்களையுடைய  காவல் பொருந்திய  வாகை மரத்தினை அடியோடு வெட்டி வீழ்த்திய நார்முடிச் சேரல்.
அரியல் – (தேன்) கள்; வறிது கூட்டரியல் – போதை தரும் பொருள் சிறிது அளவு சேர்க்கப்பட்டது. நனை – பூ முகை ; இது கள்ளுக்கு மணம் சேர்க்கும். நறவு – பழச் சாற்றினால் செய்யப்பட்ட -  கள். தேறல்  கள் தெளிவு.)
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் இருபத்தைந்து ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான். இவன் – சேரலாதனுக்கு வேளாவிக் கோமானாகிய பதுமன் மகள் பெற்றெடுத்த மகன். பூழி நாட்டில் படையெடுத்து வென்றான்.பெருவாயில் என்னும் ஊரிலுள்ள நன்னனை போரில் வென்று அவன் காவல் மரமாகிய வாகையின் அடிமரத்தை வெட்டி வெற்றி கொண்டான்.
பதிகம்
செருப் பல செய்து செங்களம் வேட்டு
துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றிக்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக்
காப்பியாற்றுக் காப்பியனார் பாடினார் பத்துப் பாட்டு. 11- 14
சேரலாதனுக்கு வேளாவிக் கோமானாகிய பதுமன் மகள் பெற்ற மகன் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல். இவன் இருபது ஆண்டுகள் அரசு வீற்றிருந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக