திங்கள், 11 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 648

திருக்குறள் – சிறப்புரை : 648
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். --- ௬௪௮
மேடை நெறியறிந்து, தான் பேசக்கருதிய பொருள் பிறழாது, கேட்போர் மனங்கொள இனிய உரையாற்ற வல்ல ஒருனைப்பெற்றால், அவன் சொல்லை, உலகமே விரைந்து ஏற்று நடக்கும்.
“ ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்
நால் திசையும் செல்லாத நாடு இல்லை அந்நாடு
வேற்று நாடு ஆகா தமவே ஆம்…” –பழமொழி.
ஆன்ற கல்விஅறிவுடையார்தம் சொல் செல்லாத நாடு, நான்கு திசைகளிலும் இல்லை; அந்நாடுகள் வேற்று நாடுகள் ஆகா ; அவருடைய நாடுகளேயாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக