வியாழன், 14 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 651

66. வினைத் தூய்மை
திருக்குறள் – சிறப்புரை : 651
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும். --- ௬௫௧
 ஒரு செயலைச் செய்வதற்கு அமைந்த துணைநலம் செல்வம் மட்டுமே தரும் ஆனால், செய்யும் செயலின்கண் கொண்ட வினைத் தூய்மை விரும்பும் எல்லாவற்றையும் தரும்.
இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை…” --நாலடியார்

எடுத்துக்கொண்ட ஒரு செயல், தன்னால் நிறைவேற்ற இயலாததாயிருந்தாலும் அதனை முயன்று முடித்தலே ஆண்மைக்கு அழகாம்.

1 கருத்து: