வெள்ளி, 29 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 665

திருக்குறள் – சிறப்புரை : 665
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். --- ௬௬௫
செயல்திறனால் சிறப்பு எய்திப் பலராலும் புகழப்பெற்ற அமைச்சரின் செயலாற்றல்  அரசனுக்கு ஆக்கமும் புகழும் உண்டாக்குவதால்  அமைச்சரை எல்லோரும் மதித்துப் போற்றுவர்.
“நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
 அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
 பழிஒரீஇ உயர்ந்து பாய்புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்.” –மதுரைக்காஞ்சி.

அமைச்சர் பெருமக்கள், நன்மை தீமைகளை ஆராய்ந்து தீமைகளை விலக்குவர் ; அன்பும் அறமும் எக்காலத்தும் தம்மைவிட்டு நீங்காது பாதுகாப்பர்; பழியிலிருந்து நீங்கி உயர்ந்து விளங்குவர் ; எங்கும் பரவிய புகழால் நிறைந்தவர் ; செம்மை சான்றவர்; அரசனால் காவிதிப் பட்டம் பெற்றவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக