புதன், 27 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 663

திருக்குறள் – சிறப்புரை : 663
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும். --- ௬௬௩
ஒரு செயலச் செய்து முடிக்கும்வரை அச்செயலின் நுட்பங்களைப் பிறர் அறியாதவாறு காத்து, அச் செயல் முடிந்தபின்னே  வெளிப்படுத்துவதே செயல்திறன் ஆகும்; அங்ஙனமின்றி இடையிலேயே தொழில்நுட்பம் வெளிப்படுமானால் அஃது அவனுக்குத் தீராத துன்பத்தைத் தரும்.
“ கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை
  அற்றம் முடிப்பான் அறிவுடையான்…” –பழமொழி.

சிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல்திறனில் சிறந்து, தான் மேற்கொண்ட செயலைச் செய்து முடிப்பான் அறிவு உடையவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக