திங்கள், 25 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 661

திருக்குறள் – சிறப்புரை : 661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.---- ௬௬௧
 ஒரு செயலைச் செய்து முடிக்கும் வல்லமை என்பது  ஒருவனின் மன வலிமையே ! ஒரு செயல் முற்றுப்பெற முன்னிற்பது மன உறுதி ஒன்றே ;  பிற செயல் திறன்கள் யாவும் பின்னிற்பவையே.
“ வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு.—குறள்.595.

நீர் நிற்கும் நிலைக்கேற்ப, நீர்ப்பூக்களின் தண்டு நீண்டு இருக்கும் அதுபோல மக்களின் உள்ள ஊக்கத்தின் அளவே அவர்தம் உயர்வும் அமையும்.

1 கருத்து: