திங்கள், 18 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 655

திருக்குறள் – சிறப்புரை : 655
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. ---௫௫
இப்படி ஒரு செய்லைச் செய்துவிட்டோமே என்று வருந்தும் அளவுக்கு எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது ; அப்படிச் செய்துவிட்டால் மீண்டும் அப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்யாதிருத்தல் நன்று.
“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
 படுபயனும் பார்த்துச் செயல்.” ---குறள். 676.

ஒரு செயலை முடிக்கும் வகையும் வரக்கூடிய இடையூறும் முடிக்கும்போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செயல் புரிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக