வெள்ளி, 22 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 659

திருக்குறள் – சிறப்புரை : 659
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. ---
 பிறர் கண்ணீர்விட்டு அழுமாறு தீய வழிகளில் (ஊழல், கொள்ளை வணிகம், திருட்டு…) ஈட்டிய செல்வம் எல்லாம், தாம் கண்ணீர்விட்டுக் கதறி அழ அழத் தம்மைவிட்டு நீங்கும் ; நேர்மையான வழியில் தேடும் செல்வத்தை இழக்க நேர்ந்தாலும் பின்னாளில் நல்ல பலனையே தரும்.
” களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
 ஆவது போலக் கெடும்.” –குறள். 283.
 களவினால் உண்டான செல்வம் அளவுகடந்து பெருகுவது போலத் தோன்றி, அளவு கடந்து அழியும்.


1 கருத்து: