சனி, 30 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 666

திருக்குறள் – சிறப்புரை : 666
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். --- ௬௬௬
ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்ற உள்ள உறுதிப்பாடு உடையவர்கள்  தாம்  எண்ணியவற்றை எண்ணியபடியே செய்து முடிப்பர்.
“ எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
  எண்ணுவம் என்பது இழுக்கு.” –குறள்.467.

ஒரு செயலைத் தொடங்குமுன் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தொடங்க வேண்டும் ; தொடங்கிய பின்னர் எண்ணிப்பார்ப்பது என்பது குற்றமேயாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக