வியாழன், 28 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 664

திருக்குறள் – சிறப்புரை : 664
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். --- ௬௬௪
இந்தச் செயலை இப்படிச் செய்யவேண்டும் என்று சொல்வது யார்க்கும் எளிய செயலே ஆனால், செல்லிய வண்ணம் செயலாற்றல் என்பது அரிய செயலாகும்.
“ மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து
  சிறுமைப் படாதே நீர் வாழ்மின் அறிஞராய்.” –நாலடியார்.
 மறுமையிலும் இன்பம் பெறுவதற்கான செயல்களை, மயக்கம் இல்லாமல்  தெளிவுடன் செய்து, துன்பமின்றி அறிவுள்ளவராய் வாழ முற்படுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக