ஞாயிறு, 20 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 11

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 11
 நாவலந்தீவு
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டிலம் முற்றி
அரசியல் பிழையாது அறநெறி காட்டி
  மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 189 – 191
நின்னால் சிறிது சினம் கொள்ளப்பட்ட பகைவர், நின் ஏவல் கேட்டு நடந்தனர், அதனால் அகன்ற இடத்தையுடைய பழைய நாவலந் தீவின்கண் அமைந்துள்ள சோழ மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் நிலப் பரப்புக்களை உன்னுடையதாக வளைத்துக்கொண்டு நூல்களில் கூறப்பட்டுள்ள அரசிலக்கணங்களில் பிழையாமல் நடந்துகொண்டனர்.
(முதுபொழில் – நாவலந் தண்பொழில் / மண்ணுலகம்; மண்டிலம் – சோழ மண்டிலம், தொண்டை மண்டிலம் போன்ற பிற மண்டிலங்கள்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக