ஞாயிறு, 13 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 4

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 4
மதநீர்
விழுச்சூழிய விளங்கு ஓடைய
கடுஞ் சினத்த கமழ் கடாஅத்து
அளறுபட்ட நறுஞ் சென்னி
வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
 மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  43 - 47
 போர்த் தொழில் பழகிய பெரிய யானைகள் சிறந்த முகபடாத்தை உடையவை  ; விளங்கும் நெற்றிப் பட்டம் அணியப்பெற்றவை, மிகுந்த சினத்தை உடையவை ; மணம் கமழும் மதநீர் ஒழுகுவதால் சேறு படிந்த தலையினை யும் , மலை என்று மயங்கும் வண்ணம் தோற்றமும் கொண்டவை . இவை சினம் மிகுந்து போர்க்களத்தில் உள்ள வீரர்களைக் கொன்று திரிவன.
 யானையின் மதநீர்க்கு மணம் உண்டு, மதநீரின் மணம் மணமகளின் கூந்தலின் மணம் போன்றது என்று திருத்தக்கதேவர் கூறுவார்.
 “ புணர் மருப்பு யானையின் புயல்கொள் மும்மதம்
 மணமகள் கதுப்பு என நாறும் “ – சீவக. 1621.
( குழி – யானையின் முகபட்டம் ; ஓடை – யானையின் நெற்றிப்பட்டம் ;அளறு – சோறு ; குரூஉ – நிறம் ;  வீறு – நெற்றி .) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக