செவ்வாய், 29 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 19

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 19
நெடியோன் – சிவன்
நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்துடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக
மாங்குடி மருதனார், மதுரைக். 6: 453 – 455
திசைகளை உடைய ஆகாயத்துடன், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து பூதங்களையும் சேரப்படைத்த மழுப்படையாகிய வாளினையுடைய பெரியோன் – ஏனையோரின் முதல்வன் ஆவான்.
சிவபெருமான், நெடியோன் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளான்.
( மாகம் – திசை ; மழு – சிவன் கையில் உள்ள வாள் ; நெடியோன் ; சிவபெருமான்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக