வெள்ளி, 11 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 2

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 2
அமைச்சர்கள்
பொய் அறியா வாய் மொழியால்
புகழ் நிறைந்த நல்மாந்தரொடு
நல் ஊழி அடிப்படர
பல்செல்வம் மீக்கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக
                    மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  19 – 23
எக்காலத்தும் உண்மை மொழிகளைப் பேசுதலால், புகழால் நிறைந்து, பொய்ம்மொழியைக் கேடறியாத நல்ல அமைச்சர்களுடன் நன்றாகிய ஊழிக்காலம் எல்லாம் பல அரசர்களும் தன்னைப் பணிந்து நடக்கவும், பல வெள்ளம் என்னும்  பேரெண்ணை உடைய பல ஆண்டுகள் தன்னுடைய அரசாளும் தன்மையைப் பலரும் சிறப்பித்து மேலாகப் போற்றவும் உலகத்தை ஆண்ட உயர்ச்சி பெற்றோர் குடியில் தோன்றியவனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக