வியாழன், 17 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 8

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 8
மழைக் கோள்
தான் தோன்றுவதற்கு உரிய நாளில் தோன்றும் வெள்ளி என்னும் கோள்மீன், தன்னுடைய இயங்கும் திசை மாறித் தென்திசையில் தோன்றினாலும், மழை வறக்கும்.
’வசையில் புகழ் வயங்கு வெண்மீன்
 திசை திரிந்து தெற்கு ஏகினும்’ ( ப. பாலை. 1-2)
’வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி
 பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப’ – ( பதிற்றுப். 24)
’மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தெந்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவே ’– புறநா. 117)
’வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்
 பள்ளம் வாடிய பயனில் காலை ’– (புறநா. 388)
’கரியவன் புகையினும்  புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ’ – சிலம்பு. (10: 102)
 வெள்ளி என்னும் கோள்மீன் தென்திசையில் எழுதல் தீய நிமித்தமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக