ஞாயிறு, 27 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 17

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 17
ஆதி போகிய ….
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதிபோகிய
 கொடிபடு கவல விடுமயிர்ப் புரவியும்
                         மாங்குடி மருதனார், மதுரைக். 6: 389 -391

கையில் எடுத்த மத்திகையை உடைய  வல்லவன் ஐந்து கதிகளிலும், பதினெட்டுச் சாரிகைகளிலும் அக்குதிரைகளுக்குப் பயிற்சி அளித்துள்ளமையால் – தங்கள் குளம்புகள் அழுத்திய வட்டமான இடத்திலும், ஆதி என்னும் கதியில் அவை ஓடின – ஒழுங்குபட்ட பிடரினையும் , இடுமயிரினையும் கொண்டவை.
( கோலன் – சவுக்கு உடையவன் ; கொள்கை – ஐந்து கதி , பதினெண்சாரிகை  ஆகிய இயல்பு ;  ஆதி – நெடுஞ் செலவு இயக்கம் ; கவல் – பிடரி ; இடுமயிர் – நிறம் ஊட்டப்பட்ட கவரி) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக