செவ்வாய், 22 மார்ச், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 12 - அ

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 12 - அ
நிலையாமை
படுகண் முரசம் காலை இயம்ப
வெடிபடக் கடந்து வேண்டு புலத்து இறுத்த
பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரைபொருது இரங்கும் கனைஇரு முந்நீர்த்
திரை இடு மணலினும் பலரே உரை செல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே
    மாங்குடி மருதனார், மதுரைக். 6: 232  – 237


ஒலிக்கின்ற பள்ளி எழுச்சி முரசம், நாட்காலத்தே ஒலிக்கும் வண்ணம் இருந்து, பகைவர் படைக்குக் கேடு உண்டாகும்படி வென்று, பின்னும் அழிக்க வேண்டும் என்று, நிலங்களில் தங்கி, வெற்றி முரசு பொருந்திய பெரிய வலிமையையுடைய, பல வேல் படையையும் உடைய அரசர்கள், செறிதலையுடைய கரிய கடலின் கரையைப் பொருது ஒலிக்கும் திரை குவிக்கின்ற மணலினும் பலராவர்.
புகழ் எங்கும் பரவுமாறு, போர் நடத்தி மக்களுக்குரிய  மன உணர்வு இல்லாமையால் – பிறவியைப் போக்கிக் கொள்ளமுயலாமல் பயனின்றி ஆண்டு மாண்டோர் – கடல் அலை குவிக்கும் மணலினும் பலராவர்.
(முரசம் – பள்ளியெழுச்சி முரசம் ; உரை – புகழ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக