சனி, 8 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 348

திருக்குறள் – சிறப்புரை : 348
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். – 348
இவ்வுலக வாழ்க்கையைத் தன் உடலோடும் உயிரோடும் ஒட்டாது முற்றும் துறந்தவரே துறவில் சிறந்தார் ; அடி மனத்தில் ஆசையைச் சுமந்து துறவு வேடம் புனைந்தவர் மயங்கி  பிறப்பாகிய வலையில் சிக்கியவர் ஆவார்.

போலித் துறவு …. இல்லறமுமன்று துறவறமுமன்று ~ இரண்டுங்கெட்டான் இழிநிலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக