செவ்வாய், 18 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை :359

திருக்குறள் – சிறப்புரை :359
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய். – 359
சார்ந்துவாழ்தலின் இயல்பை உணர்ந்து, அக, புறப் பற்றுகளை ஒழித்து ஒழுக்க நெறி நின்று வாழ்வாராயின் அவரைத் துன்பம் தரவல்ல
பிறப்புக்குரிய நோய்கள் (வினைகள்  ) பற்றிக் கொள்ளா.
“ எனைப் பிறப்பறுத்து என்வினை கட்டறுத்து ஏழ்நரகத்து

  என்னைக் கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருத்திடுமே.” – திருநாவுக்கரசர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக