திங்கள், 31 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 372

திருக்குறள் – சிறப்புரை : 372
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. – 372
தீவினையால் பொருள் இழக்கும் காலத்து  அறிவு கெடும் ; நல்வினையால் பொருள் சேரும் காலத்து அறிவு விரிவாகும்.
வளம்பட வேண்டாதார் யார் யாரும் இல்லை
அளந்தன போகம் அவர் அவர் ஆற்றான்
-      நாலடியார், 11 : 3: 1,2
செல்வ வளத்தோடு இன்பமாக வாழ வேண்டும் என்று விரும்பாதார் யார் ? ஒருவரும் இல்லை ; ஆனால் அவரவர் பழவினையால் அவரவர்க்குரிய செல்வமும் இன்பமும் அளந்து வைக்கப்பட்டிருக்கின்றன, 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக