செவ்வாய், 11 அக்டோபர், 2016

முந்நீர்

முந்நீர்
நுங்கு நீர் … கரும்புச்சாறு …. இளநீர்
இரும் பனையின் குரும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்
ஓங்கு மணற் குவவுத் தாழைத்
தீம் நீரோடுடன் விராஅய்
முந்நீருண்டு ……………………..
       மாங்குடி கிழார். புறநா. 24 : 12 ~ 16

வளையலணிந்த மகளிர் பெரிய பனையினது நுங்கின் நீரும் பொலிவினையுடைய கரும்பினது இனிய சாறும் உயர்ந்த மணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே கூடக் கலந்து இம்மூன்று நீரையும் உண்டு மகிழ்ந்தனர்…..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக