திங்கள், 24 அக்டோபர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 365

திருக்குறள் – சிறப்புரை : 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். – 365
ஆசை அற்றவர்களே முற்றும் பற்றற்றவர்கள் ஆவர் ; ஆசையை ஒழிக்க முடியாதவர்கள் பிறவித் துன்பத்தில் உழன்று துன்புறுவர்.
“ நீர்க்குமிழி ஆம் உடலை நித்தியமாய் எண்ணுதே
 ஆர்க்கும் உயராசை அழியேனே என்குதே” – பட்டினத்தார் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக