புதன், 5 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :506

திருக்குறள் – சிறப்புரை :506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி. --- 0
உற்றார் உறவு இல்லாதவரைத் தேர்ந்தெடுத்தலைத் தவிர்த்தல் வேண்டும் ஏனெனில் அவர்கள் மக்களிடத்து அன்புடன் பழகும் பண்பு இல்லாதவராகையால் பழிக்கு அஞ்சமாட்டார்கள்.
” நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
 இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் -‘ –  புறநானூறு.

 நல்வினையால் வரும் நன்மையும் தீவினையால் வரும் தீமையும் இல்லை என்போர்க்கு நட்புடையவன் ஆகாமல் விளங்குக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக