வியாழன், 27 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :528

திருக்குறள் – சிறப்புரை :528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். ---
வேந்தன், எல்லோரையும் பொதுவாக நோக்காது  அவரவர் தகுதி அறிந்து சிறப்புச் செய்தால், அச்சிறப்பினை எதிர்நோக்கிச் சுற்றமாகச் சூழ்ந்து வாழும்  சான்றோர் பலராவர்.
“ பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே” – புறநானூறு.

வேந்தே (மலையமான் திருமுடிக்காரி) புலவர்தம் புலமைத்திறம் காணாது எல்லோரையும் பொதுவாக நோக்குதலைத் தவிர்ப்பாயாக. புலமைத்திறம் அறிந்து போற்றுக.

1 கருத்து: